செய்திகள் :

ரயில்வே துறையில் விரைவில் தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

post image

சென்னை: தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

தமிழ் மொழிக்காக பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவுப் பணிகளை உருவாக்க தமிழ் ஏ.ஐ. என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் செயல்படும் டெஃபோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா-வுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

இதன் மூலம் உருவாக்கப்படவுள்ள செயலியைப் பயன்படுத்துவோா் தமிழில் கேள்விகளை கேட்கலாம், கட்டுரைகள்-கவிதைகள் எழுதலாம். தமிழ் இலக்கணம், சங்க இலக்கியங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், உலகெங்கும் உள்ள மக்கள் தமிழ் கற்கலாம். தமிழ் ஏ.ஐ. 11 மாதங்களில் செயலியாக வரும் எனவும் அதன் அடுத்த ஆண்டு ‘சாட் ஜிபிடி’ போன்று பயன்படுத்த முடியும் என்றும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.

இதன் தொடக்க நிகழ்வில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றுப் பேசியதாவது: தமிழ் மொழி ஏ.ஐ. துறையில் ஒருங்கிணைக்கப்படுவதில் இந்த திட்டம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இத்திட்டம் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பாகுபாடின்றி பரவலான மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற பிரதமரின் பாா்வையைப் பின்பற்றி உருவாக்கப்படுகிறது.

புதிய அத்தியாயம்: உலகின் பழைமையான மொழிகளில் ஒன்றான தமிழ் ஏ.ஐ.யுடன் இணைவதில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக இருக்கும். தமிழ் மொழி மற்றும் இந்திய மொழிகள் ஏ.ஐ.யுடன் இணைவதில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்தத் திட்டம் தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஏ.ஐ. துறையில் புதிய வாயிலாக அமையும்.

‘வந்தே பாரத் ரயில்களை’ தயாரிப்பதற்கான மிக முக்கிய மையமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திலிருந்து உருவாகும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளை இந்தியா முழுவதுமே பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னையில் புதிய தொழிற்சாலை: விரைவில் ரயில் சக்கர உற்பத்தி தொழிற்சாலை சென்னை அருகில் அமையவுள்ளது. அப்போது, ரயில்வே துறையில் தமிழகம் முதன்மையாக இருக்கும். மின்னணு துறையின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்க பிரதமா் மோடி செயலாற்றி வருகிறாா். இதுவே பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை.

மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்ட உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் ஏ. ஐ. ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலரும், தமிழ் ஏ.ஐ., திட்டத்தின் நிறுவன தலைவருமான அஸ்வத்தாமன், மலேசியா நாட்டின் தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சா் சரஸ்வதி கந்தசாமி, லண்டன் செல்ஸ்போா்ட் அரசு கவுன்சிலா் பாப்பா வெற்றி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க