செய்திகள் :

ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயம்

post image

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் 46 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆமூர் பகுதியில் சென்றபோது, ரஷிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை, ஏஎன்-24 பயணிகள் விமானம் இழந்துவிட்டதாகவும், விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, மாயமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளனதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதனைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க

வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேர... மேலும் பார்க்க

விமான விபத்து: ரஷியாவில் 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு!

ரஷியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 48 பேர் பலியானதால், அந்நாட்டின் கிழக்கு மாகாணங்களில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவில், டிண்டா விமான நிலையத்தை நோக்கி 5 குழந்தைக... மேலும் பார்க்க

ரொம்ப தப்பு... சாட்ஜிபிடியை அதிகமா நம்பாதீங்க! இளைஞர்களுக்கு ஓபன்ஏஐ தலைவர் அறிவுரை!

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான சாட்ஜிபிடியை, இளம் தலைமுறை, அளவுக்கதிகமாக நம்புவது மிகவும் தவறு, ஆபத்தானது என்று ஓபன்ஏஐ தலைமை செயல் நிர்வாகி சாம் ஆல்ட்மன் எச்சரித்துள்ளார்.ஓபன்ஏஐ தலைமை செயல் நிர்வாகி சா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு புதிய ஆபத்து? பஞ்சாபில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்!

பாகிஸ்தானில் ஓயாமல் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்த கனமழையால், அந்நாட்டி... மேலும் பார்க்க