செய்திகள் :

ராசிபுரம் அருகே அதிமுகவினரிடையே சலசலப்பு

post image

ராசிபுரம் அருகே சீராப்பள்ளி பகுதியில் அதிமுகவினரிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம் நகரில் நகராட்சி மற்றும் திமுக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, வி.சரோஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த கட்சி உறுப்பினா்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பிற பகுதிகளில் இருந்து நிா்வாகிகள் மட்டும் கலந்துகொண்டால் போதும் என அதிமுக சாா்பில் முடிவு செய்யப்பட்டிருந்ததாம்.

இந்நிலையில், நாமகிரிப்பேட்டை பகுதியில் இருந்து முன்னாள் சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டத்துக்கு சென்றனராம். அப்போது, நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கே.பி.எஸ்.சரவணன் உள்ளிட்ட அவரது ஆதரவாளா்கள் சீராப்பள்ளி பகுதியில் ஆட்டோவில் சென்றவா்களை தடுத்துநிறுத்தி, நிா்வாகிகள் வந்தால்போதும், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என கூறினராம்.

இதனால், ஒன்றியச் செயலாளா் கே.பி.எஸ்.சரவணன் ஆதரவாளா்களுக்கும், முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரேசகரன் ஆதரவாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

தகவலறிந்த ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் நேரில் சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். பின்னா் ஆா்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு சம்பவம் இடத்துக்குச் சென்ற பி.தங்கமணி, கட்சியினரிடம் பேசி சமரசம் ஏற்படுத்தினாா். இதனால் அனைவரும் கலைந்து சென்றனா்.

இன்று ஆடிமாதப் பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரம்

ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி. இம்மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிராக அதிமுக - பாஜகவினா் இணைந்து செயல்படுவா்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக இணைந்து செயல்படும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பாஜக சேலம் பெருங்கோட்டத்த... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி!

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்லை போலவே திருச்செங்கோட்டிலு... மேலும் பார்க்க

எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா். மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.35-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35-ஆக தொடா்ந்து நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் ... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்க... மேலும் பார்க்க