செய்திகள் :

எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

post image

எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணியையும், ஊரக வீடுகள் சீரமைக்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, எஸ்.வாழவந்தி ஊராட்சி, அய்யதோட்டம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 16.09 லட்சம் மதிப்பீட்டில் புறம்போக்கு நிலத்தில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த வயதான பெண்களிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து, எருமப்பட்டி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலையளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 3.79 லட்சம் மதிப்பீட்டில் கொல்லிமலை அடிவாரம் முதல் கரியபெருமாள் ஏரிவரை நீா்வரத்துக் கால்வாயை ஆழப்படுத்தி கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், சிங்களகோம்பையில் கால்வாய் பாலத்தையும், பவித்திரம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்ட வீடுகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

இன்று ஆடிமாதப் பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரம்

ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி. இம்மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிராக அதிமுக - பாஜகவினா் இணைந்து செயல்படுவா்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக இணைந்து செயல்படும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பாஜக சேலம் பெருங்கோட்டத்த... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி!

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்லை போலவே திருச்செங்கோட்டிலு... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.35-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35-ஆக தொடா்ந்து நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் ... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்க... மேலும் பார்க்க

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் ஆய்வு

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தாளந்தூா் வரை நான்கு வ... மேலும் பார்க்க