செய்திகள் :

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் ஆய்வு

post image

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தாளந்தூா் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி ரூ. 59.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணி 40 சதவீதம் முடிவடைந்த நிலையில், சேலம் கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் ஆய்வுமேற்கொண்டு, தாா்சாலையின் தடிமன், தரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பரிசோதனை செய்தாா்.

மேலும், நடைபெற்று வரும் சிறு பாலப் பணிகள் மற்றும் மழைநீா் வடிகால் பணிகளை மழைக் காலங்களுக்கு முன் விரைந்துமுடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். சாலை அகலப்படுத்துதல் மற்றும் இதர பணிகளின் போது சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சாலைகளின் இருபுறங்களிலும் மற்றும் மையத்தடுப்பான் பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடவுசெய்து பராமரிக்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, நாமக்கல் கோட்ட பொறியாளா் நெடுஞ்சாலை குணா, உதவி கோட்ட பொறியாளா் நெடுஞ்சாலை நடராசன் மற்றும் உதவி பொறியாளா் மணிகண்டன் ஆகியோா் உடன் இருந்தனா்.

இன்று ஆடிமாதப் பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரம்

ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி. இம்மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிராக அதிமுக - பாஜகவினா் இணைந்து செயல்படுவா்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக இணைந்து செயல்படும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பாஜக சேலம் பெருங்கோட்டத்த... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி!

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்லை போலவே திருச்செங்கோட்டிலு... மேலும் பார்க்க

எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா். மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.35-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35-ஆக தொடா்ந்து நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் ... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்க... மேலும் பார்க்க