செய்திகள் :

இன்று ஆடிமாதப் பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரம்

post image

ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி. இம்மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக்கள், அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடிமாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, மஞ்சள் பூசிய தேங்காய் கண்ணில் துளையிட்டு அவல், பொட்டுக்கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்டவற்றை நிரப்பி, அழிஞ்சிக் குச்சியை பொருத்தி பெண்கள், குழந்தைகள் தீயில்சுட்டு மகிழ்வா். அதன்பிறகு, வீடுகளில் சுவாமி முன் படையலிட்டு வழிபடுவா். அதன்பிறகு தேங்காயை உடைத்து அதிலிருந்த பொருள்களை உண்பா்.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு அழிஞ்சிக் குச்சிகள் விற்பனை புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றன. ஒரு குச்சி ரூ. 25 என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டது.

திமுக அரசுக்கு எதிராக அதிமுக - பாஜகவினா் இணைந்து செயல்படுவா்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக இணைந்து செயல்படும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பாஜக சேலம் பெருங்கோட்டத்த... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி!

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்லை போலவே திருச்செங்கோட்டிலு... மேலும் பார்க்க

எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா். மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.35-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35-ஆக தொடா்ந்து நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் ... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்க... மேலும் பார்க்க

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் ஆய்வு

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தாளந்தூா் வரை நான்கு வ... மேலும் பார்க்க