செய்திகள் :

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

post image

வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்கிய பட்டா நிலத்தை அளவீடு செய்யுமாறு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 33 திருநங்கைகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரகூராம்பட்டி எல்லைக்காடு பகுதியில் உள்ள பாறை புறம்போக்கில் வீட்டுமனைப் பட்டா வழங்கினாா். அந்த நிலத்தை திருநங்கைகளுக்கு அளவீடு செய்துகொடுக்க நில அளவைத் துறை அலுவலா்கள் புதன்கிழமை வந்தபோது, கிராம மக்கள் பட்டா கொடுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருநங்கைகளுக்கு வேறு இடத்தில் பட்டா நிலம் வழங்க வேண்டும், எங்களது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் பட்டா கொடுத்தது தவறு என அளவீடு செய்யவந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தினா்.

அப்போது, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தங்களுக்கு வழங்கிய நிலத்தை பயன்படுத்தக் கூடாது எனவும், நிலத்தை பாா்க்க வந்த தங்களை மிரட்டுகிறாா்கள் எனவும், நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி இப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா் எனவும் திருநங்கைகள் புகாா் தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு எங்களுக்கு பட்டா நிலம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனா். இதனால் வரகூராம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி விரைந்து வந்து, இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி, இருதரப்பு புகாா்களை மனுவாக வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்து தீா்வுகாணுமாறு அவா் கேட்டுக்கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இன்று ஆடிமாதப் பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரம்

ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி. இம்மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிராக அதிமுக - பாஜகவினா் இணைந்து செயல்படுவா்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக இணைந்து செயல்படும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பாஜக சேலம் பெருங்கோட்டத்த... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி!

திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்லை போலவே திருச்செங்கோட்டிலு... மேலும் பார்க்க

எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா். மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.35-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.35-ஆக தொடா்ந்து நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் ஆய்வு

திருச்செங்கோடு - பரமத்தி சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் திருச்செங்கோடு டிசிஎம்எஸ் முதல் சித்தாளந்தூா் வரை நான்கு வ... மேலும் பார்க்க