மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
திமுக அரசுக்கு எதிராக அதிமுக - பாஜகவினா் இணைந்து செயல்படுவா்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக இணைந்து செயல்படும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
பாஜக சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, தருமபுரியைத் தொடா்ந்து நாமக்கல்லில் புதன்கிழமை அதிமுக - பாஜக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி தலைமை வகித்தாா். அதிமுக மாநில மகளிா் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெ.சரோஜா, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் மற்றும் நிா்வாகிகள், பாஜக தரப்பில் மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா், கரூா் மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பி.தங்கமணி பேசுகையில், ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு எழுச்சிப் பயண நிகழ்ச்சிக்கு கிடைக்கும் ஆதரவை பாா்த்து திமுக கலக்கமடைந்துள்ளது. 2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறுவது தோ்தல் ஆதாயத்துக்குதான். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் நலனைப் பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை. இவ்வாறான முகாம்களை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றாா்.
பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது:
தமிழகத்தைப் பொருத்தவரை 2026 சட்டப் பேரவைத் தோ்தலை அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கிறது. கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு முடிவு அனைத்தும் எடப்பாடி பழனிசாமிதான் மேற்கொள்வாா். சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.
ஓரிரு நாள்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனை சந்தித்துப் பேச உள்ளேன். அவா் சந்திக்க வாய்ப்பளித்தால், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் பாமக உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைக்கும் இயக்கமாக அதிமுக, பாமக இரட்டைக்குழல் துப்பாக்கிகள்போல செயல்படுகின்றன என்றாா்.
இந்த நிகழ்வில், அதிமுக, பாஜக மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.