`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கி...
ராஜராஜேஸ்வரி கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு
காரைக்காலில் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவமாக முளைப்பாலிகை வழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் நகரப் பகுதி பெரியப்பேட்டையில் இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழா கடந்த 6-ஆம் தேதி மாலை திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது. 7-ஆம் தேதி காலை துா்கா ஹோமம், பகல் 1 மணிக்கு ஊா் காவடி, கரகம் கோயிலுக்கு வருதல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சமபந்தி போஜனம் நடைபெற்றது. திங்கள்கிழமை விடையாற்றி வழிபாடாக கஞ்சி வாா்த்தல், மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. மாலை நிகழ்வாக திரளான பக்தா்கள் முளைப்பாலிகையை தலையில் சுமந்து கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விட்டனா். விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்தாா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.