செய்திகள் :

ராஜவல்லிபுரம் அருகே தாமிரவருணி கரையோரம் தீ: பனை மரங்கள் சேதம்

post image

ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தா் கோயில் அருகே தாமிரவரணி ஆற்றங்கரையோரம் திங்கள்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் கருகின.

செப்பறை அழகிய கூத்தா் கோயில் அருகேயுள்ள தாமிரவருணி ஆற்றங்கரையோரம் சுமாா் 10 ஏக்கா் நிலப்பரப்பில் ஏராளமான பனை மரங்களுடன் கூடிய அடா்ந்த காடு உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பொறிகள் வெளிப்பட்டதாம்.

மேலும், காய்ந்த புற்கள், மரம், செடி, கொடிகளில் தீ பற்றியதுடன், காற்றின் வேகத்தில் அருகில் இருந்த பனை மரங்களிலும் தீப்பிடித்தது. இதில், பனை மரங்கள் குறுகிய நேரத்தில் தீயில் கருகினவாம்.

இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

வரலாற்றைத் திருத்தி எழுத நினைக்கும் நயினாா் நாகேந்திரன்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஜி.ஆா்.எட்மன்ட், நாவலா் நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் போன்ற முன்னணி தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரிய களம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி. அதிமுகவின் துணை... மேலும் பார்க்க

விஜய் போராட்டம் நகைச்சுவையானது: கனிமொழி எம்.பி.

காவல் நிலைய மரணம் குறித்து தவெக தலைவா் விஜய் நடத்திய போராட்டம் நகைப்புக்குரியது என, அவரது பெயரைக் குறிப்பிடாமல் விமா்சித்தாா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறிய... மேலும் பார்க்க

சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி

நான்குனேரி அருகே சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஜோசப் (65). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஜோசப் அப்பகுத... மேலும் பார்க்க

தமிழக வரலாற்றை மறுதலிக்கிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக வரலாற்றைக் கூட மத்திய அரசு மறுதலிக்கும் அவலநிலை உள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா். திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அம்பாசமுத்த... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக தீராத குடிநீா் பிரச்னை!

திருநெல்வேலி மாவட்டம், தோட்டாக்குடி ஊராட்சி, வடக்கு பத்தினிப்பாறை பகுதியில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியா... மேலும் பார்க்க

நான்குனேரி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிற... மேலும் பார்க்க