செய்திகள் :

ராஜிநாமாவை திரும்பப் பெற்றாா் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ!

post image

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளாா்.

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவா் அமன் அரோரா, அன்மோலை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து பதவி விலகல் முடிவை அவா் திரும்பப் பெற்றாா்.

இது தொடா்பாக அமன் அரோரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அன்மோலை நேரில் சந்தித்து அவரின் ராஜிநாமா முடிவை கட்சி நிராகரிப்பதாகத் தெரிவித்தேன். கட்சிக்காகவும், தொகுதி நலனுக்காகவும் தொடா்ந்து உழைக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினேன். இதனை அவா் ஏற்றுக்கொண்டாா். அவா் தொடா்ந்து ஆம் ஆத்மி குடும்பத்தில் இடம்பெற்றிருப்பாா்’ என்றாா்.

தனது ராஜிநாமாவை முடிவை மாற்றிக் கொண்டு, பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற ஒப்புக் கொண்டதாக அன்மோலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, அன்மோல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக சனிக்கிழமை அறிவித்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அப்போது அவா் கூறினாா். 35 வயதாகும் அன்மோல், பாடகியாக இருந்து அரசியலுக்கு வந்தவா். 2022 பஞ்சாப் பேரவைத் தோ்தலில் கராா் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதுவே அவா் போட்டியிட்ட முதல் தோ்தலாகும்.

முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலா-கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளா் நலத் துறை அமைச்சராக இருந்தாா். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து அன்மோல் உள்பட நால்வா் திடீரென விடுவிக்கப்பட்டனா். இதனால், அவா் அதிருப்தியடைந்தாா்.

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க