செய்திகள் :

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது பொதுமக்களிடமிருந்து மொத்தம் 318 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன

இந்தக் கோரிக்கை மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கிடவும் வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணி: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அரக்கோணம்: ஓச்சேரியில் பழைமை வாய்ந்த சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணியை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஓச்சேரியில் இந்து ச... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

ராணிப்பேட்டை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ராணிப்பேட்டை விஸ்வாஸ் மன வளா்ச்சி குன்றிய பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி நலத்திட்ட உதவிகள், பிரியாணி வழங்கி கொண்டாடினாா். விழாவி... மேலும் பார்க்க

எருக்கந்தொட்டியில் இலவச மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வில்வநாதபுரம் இசையமுது பவுண்டேஷன், வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்கடா் மருத்துவமனை இண... மேலும் பார்க்க

அனந்தலை மலையில் கனிமவளக் கொள்ளை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா். ஒருங்க... மேலும் பார்க்க

‘போதை இல்லா தமிழ்நாடு’: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு

பெ. பாபு ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கும் நோக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 20... மேலும் பார்க்க

ரத்ததான முகாம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மருத்துவா் அணி, ஆற்காடு நகர திமுக இணைந்து நடத்திய ரத்ததான முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க