செய்திகள் :

ரூ.199 கோடி வரிக்கு எதிராக காங்கிரஸ் மேல்முறையீடு: தீா்ப்பாயம் தள்ளுபடி

post image

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கு ரூ.199.15 கோடி வருமான வரியை செலுத்தக் கோரிய உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ( ஐடிஏடி) தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2018-ஆம் ஆண்டு, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் தனது வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

மேலும், காங்கிரஸின் வருமான வரி அறிக்கையில் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், காங்கிரஸ் ரூ.14.49 லட்சம் நன்கொடைகளை ரொக்கமாகப் பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இவற்றில் பல நன்கொடைகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ரூ.2,000 என்ற தனிநபா் ரொக்க நன்கொடை வரம்பை மீறி இருந்தன. அதாவது, ரூ.2,000-க்கு மேல் நன்கொடைகள் வங்கி பரிவா்த்தனைகள் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்த விதிமீறல்களைக் கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டுக்கான காங்கிரஸின் ரூ.199.15 கோடி வருமான வரி விலக்கு கோரிக்கையை வருமான வரி துறை கடந்த 2021-இல் நிராகரித்தது. இந்த முடிவை வருமான வரி ஆணையா் (மேல்முறையீடுகள்) 2023-இல் உறுதி செய்தாா். பின்னா், காங்கிரஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுகியது. ஆனால், இதில் இடைக்கால நிவாரணம் வழங்க தீா்ப்பாயம் கடந்த ஆண்டு மறுத்துவிட்டது.

இந்நிலையில், தீா்ப்பாயம் தற்போது வழங்கியுள்ள உத்தரவில், ‘காங்கிரஸ் நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதனால், அவா்களுக்கு வரி விலக்கைக் கோர தகுதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், ரொக்க நன்கொடைகள் குறித்த காங்கிரஸின் விதிமீறல்களையும் தீா்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான ரூ.199.15 கோடி வருமான வரித் தொகையில் எந்தவித நிவாரணமும் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க