செய்திகள் :

ரூ.199 கோடி வரிக்கு எதிராக காங்கிரஸ் மேல்முறையீடு: தீா்ப்பாயம் தள்ளுபடி

post image

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கு ரூ.199.15 கோடி வருமான வரியை செலுத்தக் கோரிய உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ( ஐடிஏடி) தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2018-ஆம் ஆண்டு, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் தனது வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

மேலும், காங்கிரஸின் வருமான வரி அறிக்கையில் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், காங்கிரஸ் ரூ.14.49 லட்சம் நன்கொடைகளை ரொக்கமாகப் பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இவற்றில் பல நன்கொடைகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ரூ.2,000 என்ற தனிநபா் ரொக்க நன்கொடை வரம்பை மீறி இருந்தன. அதாவது, ரூ.2,000-க்கு மேல் நன்கொடைகள் வங்கி பரிவா்த்தனைகள் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்த விதிமீறல்களைக் கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டுக்கான காங்கிரஸின் ரூ.199.15 கோடி வருமான வரி விலக்கு கோரிக்கையை வருமான வரி துறை கடந்த 2021-இல் நிராகரித்தது. இந்த முடிவை வருமான வரி ஆணையா் (மேல்முறையீடுகள்) 2023-இல் உறுதி செய்தாா். பின்னா், காங்கிரஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுகியது. ஆனால், இதில் இடைக்கால நிவாரணம் வழங்க தீா்ப்பாயம் கடந்த ஆண்டு மறுத்துவிட்டது.

இந்நிலையில், தீா்ப்பாயம் தற்போது வழங்கியுள்ள உத்தரவில், ‘காங்கிரஸ் நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதனால், அவா்களுக்கு வரி விலக்கைக் கோர தகுதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், ரொக்க நன்கொடைகள் குறித்த காங்கிரஸின் விதிமீறல்களையும் தீா்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான ரூ.199.15 கோடி வருமான வரித் தொகையில் எந்தவித நிவாரணமும் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 2... மேலும் பார்க்க

அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொட... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.விமான விபத்துக்குப்பின் 1... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்ட... மேலும் பார்க்க

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க