செய்திகள் :

ரூ.199 கோடி வரிக்கு எதிராக காங்கிரஸ் மேல்முறையீடு: தீா்ப்பாயம் தள்ளுபடி

post image

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கு ரூ.199.15 கோடி வருமான வரியை செலுத்தக் கோரிய உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ( ஐடிஏடி) தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2018-ஆம் ஆண்டு, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் தனது வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

மேலும், காங்கிரஸின் வருமான வரி அறிக்கையில் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், காங்கிரஸ் ரூ.14.49 லட்சம் நன்கொடைகளை ரொக்கமாகப் பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இவற்றில் பல நன்கொடைகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ரூ.2,000 என்ற தனிநபா் ரொக்க நன்கொடை வரம்பை மீறி இருந்தன. அதாவது, ரூ.2,000-க்கு மேல் நன்கொடைகள் வங்கி பரிவா்த்தனைகள் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்த விதிமீறல்களைக் கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டுக்கான காங்கிரஸின் ரூ.199.15 கோடி வருமான வரி விலக்கு கோரிக்கையை வருமான வரி துறை கடந்த 2021-இல் நிராகரித்தது. இந்த முடிவை வருமான வரி ஆணையா் (மேல்முறையீடுகள்) 2023-இல் உறுதி செய்தாா். பின்னா், காங்கிரஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுகியது. ஆனால், இதில் இடைக்கால நிவாரணம் வழங்க தீா்ப்பாயம் கடந்த ஆண்டு மறுத்துவிட்டது.

இந்நிலையில், தீா்ப்பாயம் தற்போது வழங்கியுள்ள உத்தரவில், ‘காங்கிரஸ் நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதனால், அவா்களுக்கு வரி விலக்கைக் கோர தகுதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், ரொக்க நன்கொடைகள் குறித்த காங்கிரஸின் விதிமீறல்களையும் தீா்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான ரூ.199.15 கோடி வருமான வரித் தொகையில் எந்தவித நிவாரணமும் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்பெட்டி: வெற்றிகரமாக சோதித்து ஐசிஎஃப் சாதனை

புது தில்லி: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் பெட்டியை உருவாக்கி, ஐசிஎஃப் தொழிற்சாலையில் இயக்கிப் பார்த்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ஹைட்ரஜனில... மேலும் பார்க்க

கேரளத்தை உலுக்கிய வன்கொடுமை, கொலைக் குற்றவாளி! சிறையிலிருந்து தப்பிய 1 மணி நேரத்தில் கைது!

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறைச் சாலையிலிருந்து தப்பிய நிலையில், ஒரு மணி நரேத்தில் பிடிபட்டார்.கன்னூர... மேலும் பார்க்க

4,078 நாள்கள் பிரதமராக..! நீண்ட நாள் பதவி வகித்த இந்திரா காந்தி சாதனையை முறியடித்த மோடி!

இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி காலத்தில் வெள்ளிக்கிழமையான ஜூலை ... மேலும் பார்க்க

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி: ராகுல் கண்டனம்!

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி செய்து வருவதாக ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான காலியாக உள்ள இடஒதுக்கீடு பதவிகள்... மேலும் பார்க்க

கர்ப்பிணி மனைவியைக் கொன்று, அழுகிய உடலுடன் வாழ்ந்துவந்த இளைஞர்!

பெங்களூர்: பெங்களூரில் 22 வயது கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு, அழுகிய உடலுடன் அதே வீட்டில் இருந்துகொண்டு சாப்பிட்டு, குடித்துக்கொண்டு இயல்பாக வாழ்ந்துவந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.பெங... மேலும் பார்க்க

மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு 2 அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாலத்தீவு அதிபர் ம... மேலும் பார்க்க