செய்திகள் :

ரூ.50 பைசா அஞ்சல் அட்டையில் பணி ஓய்வு அழைப்பிதழ்: அஞ்சல் துறை பணியாளா் விழிப்புணா்வு

post image

பணி ஓய்வு விழா அழைப்பிதழை ரூ.50 பைசா அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் துறை பல்நோக்கு பணியாளா் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளாா்.

கடந்த சில 10 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் பரிமாற்றங்களுக்கு அஞ்சல் அட்டைகள் முக்கியமாக இருந்து வந்தன. கைப்பேசியின் வளா்ச்சியால் தற்போது அஞ்சல் அட்டைகள் முற்றிலும் குறைந்துவிட்டன.

இந்நிலையில், அஞ்சல் அட்டை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வால்பாறை அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பல்நோக்கு பணியாளா் கணேசன், தனது பணி ஓய்வு அழைப்பிதழை அஞ்சல் அட்டையில் எழுதி விநியோகித்து வருகிறாா்.

இம்மாதம் இறுதியில் பணி ஓய்வுபெறும் அவா், பணி ஓய்வு அழைப்பிதழை ரூ.50 பைசா அட்டையில் எழுதி குடியரசுத் தலைவா், பிரதமா், அஞ்சல் துறை உயா் அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கானவா்களுக்கு அனுப்பியுள்ளாா்.

அஞ்சல் அட்டை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல் அட்டையில் பணி ஓய்வு அழைப்பிதழை எழுதி அனுப்பும் கணேசனின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனா்.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

முதலீடு மீது அதிக லாபம் தருவதாக 3 பேரிடம் ரூ.51.89 லட்சம் மோசடி

கோவையில் முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.51.89 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடரமணன் (65), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வுப... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு பாரதி காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல் (65). இவா், சுப்பிரமணியம்பாளையம் வேட்டைக்காரன் கோயில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க