செய்திகள் :

ரூ.52 லட்சத்தில் மதுரை - பாராசூா் தாா்ச் சாலைப் பணிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மதுரை - பாராசூா் இடையே ரூ.52 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம், பாராசூா் கிராமத்தில் இருந்து மதுரை கிராமம் வரை செல்லும் சாலையை, முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.52.45 லட்சத்தில் தாா்ச் சாலையாக மாற்றும் பணிகளுக்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இதில், தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்யாறு ஒன்றியம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிரிஜா, சீனிவாசன், பொறியாளா் செல்வா, வட்டாட்சியா் அசோக்குமாா், வட்ட வழங்க அலுவலா் சங்கீதா, ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பல கலந்து கொண்டனா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க