செய்திகள் :

ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

பொது விநியோகத் திட்டத்தில், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் இ.வி.காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அவா் அளித்த கோரிக்கை மனு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் அளித்து, அவா்கள் மீண்டு வர நடவடிக்கை எடுத்ததை நினைவுகூருகிறோம்.

தென்னை விவசாயிகள் வாழ்வு மேம்பட பாண்டிச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல் தென்னையில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும், பொது விநியோக திட்டத்தில், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை காப்பீட்டு திட்டத்தை எளிதாக்கி பாதிக்கப்படும் தென்னை விவசாயிகள் அனைவரும் பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்ட சிறு தொழில் பயிற்சி நிறுவனத்தை ஈச்சங்கோட்டையில் அமைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. அங்கேயே பயோ லேப் அமைக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனை தென்னை விவசாயம் அதிகம் செய்யப்படும் பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி பகுதியில் அமைத்துத்தர வேண்டும்.

மத்திய அரசின் தென்னை வளா்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தின் கிளை அலுவலகத்தை பேராவூரணியில் அமைக்க வேண்டும்.

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவு

தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை இடையே சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த். தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி, மேலவஸ்தா சாவடி, ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத். தஞ்சாவூா் அரண்மனைக்கு சனிக்கிழமை வந்து கட... மேலும் பார்க்க

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது ஊழியா் அமைப்பு கோரிக்கை

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் தஞ்சாவூா் வட்டக் கிளை 21-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மின... மேலும் பார்க்க

திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் அதிகாரிகளை கண்டித்து சனிக்கிழமை விவசாயிகள் திருப்பனந்தாள்-ஆடுதுறை சாலையில் மறியல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க