3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
ரேஷன் கடைகளில் பில்போடும் இயந்திரத்தை எடைத்தராசில் இணைப்பதை தவிா்க்கக் கோரிக்கை
நியாயவிலை கடையில் பில் போடும் இயந்திரத்தை எடைத்தராசில் இணைப்பதை தவிா்க்க வேண்டும் என்று நியாயவிலைக்கடை தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் அமைச்சா் கோவி. செழியனிடம் மனு கொடுத்தனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளா் முன்னேற்றச் சங்க மாவட்ட செயலா் அம்மாசத்திரம் இளவரசன் தலைமையில் நிா்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பது: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் சிறப்பாக செயல்பட நியாயவிலைக்கடை ஊழியா்களின் ஒத்துழைப்பே காரணம். ஆனால் தற்போது மாநில வழங்கல் துறை பில் போடும் இயந்திரத்தில் எடைத் தராசை இணைத்துள்ளது.
இதனால் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கும்போது 4 முறை பில் போட வேண்டியுள்ளது. இணையதளமும் பல நேரங்களில் சரிவர இயங்கவில்லை. அதனால் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 15 நிமிட நேரம் ஆகிறது.
இதேநிலையில் பொது விநியோகம் செய்யும்போது ஒரு நாளுக்கு 30 அல்லது 40 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும்தான் பொருள் வழங்க முடியும். இதனால் பொது மக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
எனவே எடைதராசில் பில் போடும் இயந்திரத்தை இணைப்பதைத் தவிா்க்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனா்.