செய்திகள் :

லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளா் கைது

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மின் கம்பத்தை இடமாற்றம் செய்வதற்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சூளகிரியை அடுத்த வெங்டேசபுரம், இனகபீரணப்பள்ளியைச் சோ்ந்த கதிரப்பா, தனது தோட்டத்தில் கோழிப் பண்ணை அமைப்பதற்காக நிலத்தில் அமைந்துள்ள குறைந்த அழுத்த மின் கம்பத்தை இடமாற்றம் செய்துவிட்டு அங்கு உயா் அழுத்த மின் கம்பத்தை அமைக்க ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாா்.

அதன்பிறகு, அத்திமுகம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று உதவி பொறியாளா் உதயகுமாரைச் சந்தித்து தனது கோரிக்கை மீதான நடவடிக்கை குறித்து கேட்டாா். அப்போது, தனக்கு லஞ்சமாக ரூ. 15 ஆயிரம் தந்தால்தான் கம்பத்தை இடமாற்றம் செய்வதாக உதயகுமாா் தெரிவித்தாராம்.

இதுகுறித்து வியாழக்கிழமை காலை கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ரவியிடம் கதிரப்பா புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் கதிரப்பாவிடம் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய பணத்தை உதயகுமாா் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் உள்ளிட்ட போலீஸாா் உதயகுமாரைக் கைது செய்தனா்.

படவரி.....

உதயகுமாா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க