முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில...
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, புதுப்பை பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தாா்.
விசாரணையில், அவா் கும்பம்பாளையத்தைச் சோ்ந்த சண்முகம் (52) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சண்முகத்தை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.