செய்திகள் :

லாரி மோதியதில் இருவா் காயம்

post image

மாா்த்தாண்டம் அருகே லாரி மோதி கட்டடத் தொழிலாளா்கள் இருவா் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் வின்சென்ட் (50), டென்னிஸ் (58). இவா்கள் இருவரும் இருநாள்களுக்கு முன் இடவிளாகம் பகுதியில் உள்ள கடையிலிருந்து தேநீா் அருந்திக் கொண்டிருந்தனா்.

அப்போது, திருவனந்தபுரத்திலிருந்து குளிா்பானம் ஏற்றி வந்த லாரி இருவா் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா், லாரி ஓட்டுநா் சண்முகராஜ் என்பவா் மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகிறாா்கள்.

பரைகோட்டில் தலைக்கவச விழிப்புணா்வு பிரசாரம்

தக்கலை அருகே பரைகோட்டில் தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. தக்கலை போக்குவரத்து போலீஸாரும், பரைகோடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரும் இணைந்து இப்பிரசாரத்தில... மேலும் பார்க்க

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் போலீஸாா் பணியாற்ற எஸ்.பி. அறிவுறுத்தல்

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் போலீஸாா் பணியாற்ற வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் அறிவுறுத்தினாா். மாவட்ட காவல் துறை சாா்பில், மாதாந்திர குற்றக் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை, விநாடிக்கு 699 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் பாசனத்துக்காக கடந்த 1ஆம் தேதிமுதல் பேச்சிப்பாறை அணையி... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் மேலத்தெருக்கரை பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (40) என்ப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி கடனுதவி

நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 648 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. சென்னையில் மகளிா் குழுக்களுக்கு விருது, வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்... மேலும் பார்க்க

‘ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை’

நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா... மேலும் பார்க்க