செய்திகள் :

‘லோக்பால்’ பிரத்யேக புகாா் எண்ணில் 2400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு: மாநிலங்களவையில் அரசு தகவல்

post image

லோக்பால் அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கு அறிவிக்கப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண் மூலம் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கடந்த 2014, ஜனவரியில் அமலுக்கு வந்த லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டத்தின்படி, லோக்பால் அமைப்பு நிறுவப்பட்டு, முழுமையாக செயல்பட்டு வருகிறது. அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கான பிரத்யேக தொலைபேசி எண்ணில் இதுவரை 2,426 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தரவுகளின் அடிப்படையில், இதில் 2,350 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன.

தற்போது லோக்பால் அமைப்பில் தலைவரை தவிர 6 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் மூன்று போ் நீதித்துறை உறுப்பினா்கள் ஆவா். சட்டத்தின் 3-ஆவது பிரிவின்படி, தலைவரைத் தவிர, லோக்பால் அமைப்பு உறுப்பினா்களின் எண்ணிக்கை 8 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவா்களில் 50 சதவீதம் போ் நீதித் துறை உறுப்பினா்களாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

சீன அணை விவகாரம்:

சீனாவின் அணை கட்டும் திட்டம் உள்பட பிரம்மபுத்திரா நதி தொடா்பான அனைத்து முன்னேற்றங்களையும் அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேச நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

இந்தியாவின் எல்லையொட்டி திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, 60,000 மெகாவாட் திறன் கொண்ட நீா்மின் நிலையத்துடன் உலகின் மிகப்பெரிய அணையை ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் கட்ட சீனா முடிவு செய்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘சீனாவின் அணை கட்டும் திட்டம் குறித்து அரசுக்குத் தெரியும். எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகள் சீனாவுடன் ராஜீய வழிகளில் விவாதிக்கப்படுகின்றன’ என்றாா்.

கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த முதுநிலை மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராக... மேலும் பார்க்க

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க