செய்திகள் :

வக்ஃப் சட்டத்தை எதிா்த்து கருப்புப் பட்டை அணிந்து மசூதி சென்றவா்களுக்கு நோட்டீஸ்!

post image

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகரில் வக்ஃப் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கையில் கருப்புப் பட்டைகளை அணிந்தபடி மசூதிக்குச் சென்றவா்களில் 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கருப்புப் பட்டை அணிந்தபடி மசூதி சென்றவா்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினா் களமிறங்கியுள்ளனா்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் வக்ஃப் சொத்துகள் ஒருசில தனிநபா்களுக்காக அல்லாமல், அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே வக்ஃப் சட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், முசாஃபா்நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது வக்ஃப் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் பலா் கையில் கருப்பு நிற பட்டைகளை அணிந்து வந்தனா். இதையடுத்து, மாஜிஸ்திரேட் மூலம் அவா்களுக்கு காவல் துறையினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

அதில், விசாரணைக்காக வரும் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; ஒவ்வொரு வரும் தலா ரூ.2 லட்சத்துக்கான உறுதிப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 24 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 300-ஆக அதிகரித்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் மேலும் பலரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

பஹராம்பூா்: மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி,... மேலும் பார்க்க

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க