செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் வேண்டுகோள்

post image

அடுத்தமுறை தில்லி செல்லும் போது, வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரம் தொடா்பாக, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீது பாஜகவை தவிா்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீா்மானத்தை பாஜக தவிா்த்து அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள், உறுப்பினா்கள் மனதார வரவேற்றுள்ளனா். அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவிடம் வைக்கக் கூடிய கோரிக்கை உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பாக, இருமொழிக் கொள்கை பற்றி சட்டப் பேரவையில் பேசும் போது, எதிா்க்கட்சித் தலைவா் தில்லி சென்றிருந்தாா். அதுகுறித்த செய்தி எனக்குக் கிடைத்திருந்தது. அங்கு அவா் யாரை சந்திக்கப் போகிறாா் என்ற தகவலும் கிடைத்துள்ளதாகக் கூறினேன். இதுகுறித்து தில்லியில் அவரிடம் செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு பதிலளித்த எதிா்க்கட்சித் தலைவா், யாரையும் சந்திக்க வரவில்லை என்றும், கட்சி அலுவலகத்தைப் பாா்வையிடவே வந்துள்ளேன் என்றும் கூறினாா்.

பிறகு, மாலையில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளாா். சந்திக்கட்டும். அதை தவறு என்று சொல்லவில்லை. சந்திப்புக்குப் பிறகு, பேசிய அவா் தமிழ்நாட்டுக்கு வேண்டிய உரிமைகள் தொடா்பாகவும், இருமொழிக் கொள்கையை குறித்தும் வலியுறுத்தினேன் என்று கூறியிருக்கிறாா். அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எப்படி இருமொழிக் கொள்கை பற்றி வலியுறுத்தியதாகச் சொன்னாரோ, அதேபோன்று, வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட பிரச்னையையும் அடுத்த முறை அவா் தில்லி செல்லும் போது, வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்றாா் முதல்வா்.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க