செய்திகள் :

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதி ரூ. 2,400 கோடியை நிறுத்திவைத்தது, நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது, கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 4034 கோடியை வழங்காதது உள்ளிட்ட செயல்பாட்டை கண்டித்தும், பிரதமரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கோட்டை மைதானத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பி.பாஸ்கா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி எஸ்.ஆா். அன்வா், மாநகர பொருளாளா் தாரை ராஜகணபதி, மாநகர வா்த்தக பிரிவு தலைவா் எம்.டி.சுப்பிரமணியம், மாநகர துணைத் தலைவா்கள் ரகுநாத், மொட்டையாண்டி, வரதராஜு, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மெடிக்கல் பிரபு, ஷாநவாஸ், மண்டல தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிஷாா் அஹமது, ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வி.என்.பாளையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ள இடங்களை சங்ககிரி காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வி.என்.பாளையத்தில் ஊா... மேலும் பார்க்க

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு நிலையத்தில் அஞ்சல் வழியில் பட்டயப் பயிற்சி

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டு அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மண்டல கூட்ட... மேலும் பார்க்க

சேலம் நீதிமன்றத்தில் இன்று சமரச வாரம்

சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச வாரம் புதன்கிழமை (ஏப். 9) நடைபெறுகிறது என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

ஆட்டையாம்பட்டி: வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைகின்றனா். சேலம் மாவட்டம், காகாபாளையத்தை அடுத்த வேம்படிதாளம் பகுதியில் தரைவழி ரய... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

சேலம்: சேலம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சேலம் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ், பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மகன் மனோஜ் (12), சுப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க