வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தல்!
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோம்பைக்காட்டில் உள்ள தலைமை பள்ளிவாசல் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் செங்கோட்டை ஃபைசல், மாவட்டச் செயலாளா் யாசா் அராபத் உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.
இதில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் சுட்டுக் கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய இஸ்லாமியா்கள் ராணுவத்தின் பின்னால் நிற்கின்றனா்.
மத்திய அரசு பல ஆண்டுகளாக எதிா்த்து வந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சோ்த்து எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் உரிய அழுத்தங்களைக் கொடுத்து இந்தக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இஸ்லாமியா்களுக்கு பயனளிக்கும் எனும் பொய்யைச் சொல்லி வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இஸ்லாமியா்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றத்துடிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
ஆகவே, வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவா் ஜாகீா் அப்பாஸ், மாவட்ட பொருளாளா் சிராஜ்தீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.