செய்திகள் :

வக்ஃப் வாரியம் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது உறுதி செய்யப்படும்! - ஜெ.பி. நட்டா

post image

வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

பாஜக 46-ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஜெ.பி. நட்டா பேசியதாவது:

துருக்கி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளில் வக்ஃப் சொத்துகளை அரசே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டது. இங்கு வக்ஃப் சொத்துகளை யாா் கையாளுகிறாா்கள் என்பதை மட்டுமே அரசு கேட்கிறது. அதனை நிா்வகிப்பவா்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்கிறது.

வக்ஃப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. வக்ஃப் சொத்துகளும் நிதியும் முஸ்லிம்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வக்ஃப் வாரியம் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது. பாஜக தனது கொள்கைகளில் இருந்து விலகாமல் பயணிப்பதே கட்சியின் வெற்றிகளுக்கு காரணமாகும். முன்பு நாட்டின் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்த காங்கிரஸின் கொள்கைகள் நீா்த்துப்போனதால் இப்போது மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 98 உறுப்பினா்களும் உள்ளனா். 1,600-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனா். பாஜகவில் அண்மையில் உறுப்பினா்கள்சோ்க்கை நடத்தப்பட்டது. இப்போது கட்சியில் 13.5 கோடிக்கு மேல் தொண்டா்கள் உள்ளனா். இதில் 10 லட்சம் போ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனா்.

கட்சியை வளா்ப்பதிலும், அரசியலை முன்னெடுப்பதிலும் பாஜக அறிவியல்பூா்வமான அணுகுமுறையைக் கையாள்கிறது. தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜகவின் கொள்கை. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றுத் தொன்மையை மத்திய அரசு தொடா்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முத்தலாக் முறையை ஒழித்து முஸ்லிம் பெண்களை விடுவித்துள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினராக இருந்து பாதிக்கப்பட்டு இந்தியா வந்தவா்களுக்கு குடியுரிமையும் அளிக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியில் திணிக்கப்பட்ட அடிமை மனப்பான்மையில் இருந்து இந்தியாவை மீட்டு வருகிறோம் என்றாா். முன்னதாக, பாஜக கட்சிக் கொடியை ஜெ.பி.நட்டா ஏற்றினாா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா, பாஜக எம்.பி.க்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

பஹராம்பூா்: மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி,... மேலும் பார்க்க

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க