செய்திகள் :

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் மீது தாக்குதல்! விசாரணைக் குழு அமைப்பு!

post image

வங்கதேச நாட்டிலுள்ள நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள, நோபல் பரிசுப்பெற்ற வங்காள மொழி எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் தற்போது அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று, அந்த அருங்காட்சியகத்துக்கு, ஒரு நபர் தனது குடும்பத்துடன் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, வாகன நிறுத்துமிடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக அந்நபருக்கும், அங்குப் பணிப்புரியும் ஊழியருக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் அங்குள்ள அலுவலக அறையில் அடைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு எதிராக, கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டமானது வன்முறையாக மாறி, ஒரு கும்பல் அருங்காட்சியகத்தின் அரங்கத்தை அடித்து நொறுக்கியதுடன், அதன் இயக்குநரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள, 3 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்து, 5 நாள்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஷாஸாத்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் தாகூர் குடும்பத்தின் பூர்வீக இல்லம்m மற்றும் வருவாய் அலுவலகமாகும். இத்துடன், அங்குதான் ரவீந்திரநாத் தாகூர், தனது பல முக்கிய இலக்கிய படைப்புகளை எழுதியதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

ஆமதாபாத்: விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழப்பு; ஒருவர் உயிர் பிழைத்தார்! -ஏர் இந்தியா

ஆமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் இருந்த ஒரேயொருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில... மேலும் பார்க்க

என் வாழ்க்கையின் மோசமான நாள்: ஏர் இந்தியா தலைவர்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்... மேலும் பார்க்க

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! வெளியானது சிசிடிவி காட்சி!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேர... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும்,... மேலும் பார்க்க

ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் ’டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க