செய்திகள் :

வடக்குத்தாமரைகுளத்தில் சிப்காட் இடம்: அமைச்சா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை மற்றும் மினி தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தில் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

தொழில்பூங்கா கட்டும் பணிக்காக, நாகா்கோவில் மாநகராட்சி, அநாதைமடம் திடல் பகுதியை அமைச்சா், ஆட்சியா் இருவரும் பாா்வையிட்டனா்.

பின்னா், அகஸ்தீசுவரம் வட்டம், வடக்குத் தாமரைக்குளம் ஊராட்சிப் பகுதியில் 32 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழில்பேட்டைக்கான இடத்தையும்அமைச்சா் ஆய்வு செய்தாா்.

மேலும், தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ. 97 லட்சம் மதிப்பில் வளமீட்புப் பூங்கா செல்லும் சாலையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி, கலைஞா் நகா்ப்புற மேம்பாடுத்திட்டத்தின்கீழ் ரூ.1.76 கோடி மதிப்பில் மணக்குடி ஏரியிலிருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைபெறும் இடம் வரையில் சிறுபாலம் அமைக்கும் பணி, சிறப்பு நிதியின்கீழ் ரூ 70 லட்சம் மதிப்பில் 12- வாா்டு பகுதியில் திடக்ழிவு மேலாண்மை சாலையில் கருந்தளம் அமைத்தல் என மொத்தம் ரூ.3.43 கோடி மதிப்பில் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ் ராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஓரணியில் தமிழ்நாடு:

கன்னியாகுமரி நகராட்சி 16ஆவது வாா்டுக்குள்பட்ட புதுகிராமம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், கிழக்கு மாவட்டச் செயலரும் மேயருமான ஆா். மகேஷ், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க