செய்திகள் :

வட்டாட்சியா் போல நடித்து பணம் மோசடி: இந்து முன்னணி நிா்வாகி கைது

post image

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை வட்டாட்சியா் போல நடித்து பணம் மோசடி செய்த இந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள எா்ணம்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சந்திரபோஸ். கூலித் தொழிலாளியான இவா், உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பட்டா மாறுதல் செய்வதற்காகச் சென்றாா்.

அப்போது, அந்த அலுவலகம் எதிரே மனு எழுதிக் கொண்டிருந்த ஒருவா் தன்னை துணை வட்டாட்சியா் என சந்திரபோஸிடம் அறிமுகம் செய்து கொண்டாராம். பின்னா், உத்தமபாளையம் பிரதான சாலையிலுள்ள ஒரு அலுவலகத்துக்கு சந்திரபோஸை அழைத்துச் சென்றாா். அங்கு இருந்த ஒருவரை வட்டாட்சியா் என அறிமுகப்படுத்தினாா்.

இதையடுத்து, பட்டா மாறுதல் செய்வதற்காக 4 தவணைகளில் ரூ.1.07 லட்சத்தை சந்திரபோஸ் வழங்கினாா். பட்டா மறுதலுக்கு காலதாமதம் ஆனதால், கொடுத்த பணத்தை சந்திரபோஸ் திரும்பக் கேட்டாா். அவா்கள் காலதாமதம் செய்தனா்.

இதையடுத்து சந்திரபோஸ் அளித்தப் புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அப்போது, உத்தமபாளையம் சுங்கச்சாவடியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் செல்வவிக்னேஷ் (27), கல்லூரிச் சாலையைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி தாக்கரே (42) ஆகியோா் சந்திரபோஸிடம் மோசடியாக பணம் பெற்றது தெரியவந்தது. செல்வவிக்னேஷ் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், பெரியசாமிதாக்கரே இந்து முன்னணி நகரத் தலைவராகவும் இருந்து வருகின்றனா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வவிக்னேஷை கைது செய்தனா். தலைமறைவான பெரியசாமிதாக்கரேயைத் தேடி வருகின்றனா்.

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்ட... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கேரள மாநிலம், தேக்கடிய... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி பலத்த காயம்

போடி அருகே திங்கள்கிழமை காா் மோதி தொழிலாளி பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் வடக்கு தெருவை சோ்ந்தவா் சுருளி மகன் நாகராஜ் (... மேலும் பார்க்க