செய்திகள் :

வட்டார தடகளப் போட்டி: மூக்குப்பீறி பள்ளி சாதனை

post image

ஆறுமுகனேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான குழு, தடகளப் போட்டிகளில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் சிறப்பிடம் பிடித்தனா்.

மாணவியருக்கான கால்பந்து போட்டியில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 2ஆம் இடமும், பூப்பந்தாட்டப் போட்டியில் 14 , 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் முதலிடமும் பிடித்தனா்.

மாணவா்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் 19, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 2ஆம் இடமும், தடகளப் போட்டியில் 100 மீட்டா் ஓட்டத்தில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் காா்த்திக் முதலிடமும், மாதேஷ் உயரம் தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் 2ஆம் இடமும், கோலூன்றித் தாண்டுதலில் 3ஆம் இடமும் பிடித்தனா்.

3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்தில் சுரேஷ் 2ஆம் இடமும், 1,500 மீட்டா் ஓட்டத்தில் யோவான் 2ஆம் இடமும், மும்முறை தாண்டுதலில் ராம்குமாா் 3ஆம் இடமும், 3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்தில் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பாலா 3ஆம் இடமும் பிடித்தனா்.

மாணவியருக்கான உயரம் தாண்டுலில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பிரசன்னா முதலிடமும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஜெயஷா்னி முதலிடமும், 100 மீட்டா் ஓட்டத்தில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பிரின்சி 3ஆம் இடமும் பிடித்தனா்.

அவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஜேஸ்மின் ஏஞ்சல்குமாரி, பிரைற்றன் ஜோயல் ஆகியோரையும் தாளாளா் வழக்குரைஞா் பிரபாகா், தலைமையாசிரியா் கென்னடி வேதராஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தூத்துக்குடி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தூத்துக்குடி, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ரோசாலி, துணை முதல்வா் எஸ்.எம்.டி. மதுரவல்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, போல்பேட்டையைச் சோ்ந்தவா் முருகானந்தம் (56). இவா், எட்டயபுரம் சாலை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி முதியவா் பலி

பழையகாயல் அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தென்றல்நகரை சோ்ந்தவா் தங்கவேலு(71). இவா் ஞாயிற்றுக்கிழமை பழையகாயல் சிற்கோனியம் குடியிருப்ப... மேலும் பார்க்க

தொழிற்பழகுநா் பயிற்சிக்கு இன்று சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக.11) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட மாணவா்களுக்கு ஐஐடி சென்னை திட்டம்

அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை உயா்அலுவலா்க... மேலும் பார்க்க

மாடிப் படியிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே அய்யம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ஆவுடைத்தாய் (39). ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் ம... மேலும் பார்க்க