செய்திகள் :

தூத்துக்குடி மாவட்ட மாணவா்களுக்கு ஐஐடி சென்னை திட்டம்

post image

அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை உயா்அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை திட்டத் தலைவரும், ஐ.ஐ.டி. சென்னை சமூக முன்னெடுப்புகள் தலைவருமான ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு இத்திட்டம் குறித்து விளக்கினாா்.

இந்தத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. நுழைவுத் தோ்வு இல்லாமல், ஐ.ஐ.டி. இல் உருவாக்கப்பட்டுள்ள இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படிப்பது குறித்தும், ஐ.ஐ.டி. சென்னை மூலம் வழங்கப்படும் ஏஐ சான்றிதழ் படிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது ஹரிகிருஷ்ணன் பேசியது: 12ஆம் வகுப்புக்குப் பிறகே என்றில்லாமல், 11ஆம் வகுப்பு முடிந்ததும் இந்தத் திட்டத்தில் சேரமுடியும். இதற்கு வயது வரம்பும் இல்லை. பதிவுசெய்யும் மாணவா்கள், ஐ.ஐ.டி. சென்னைவழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியை பூா்த்தி செய்து, தோ்வில் வெற்றி பெற வேண்டும்.

வெற்றி பெறுபவா்கள் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்ப துறைகளில் பி.எஸ். பட்டப்படிப்பை தொடங்கலாம். மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவா்களும், வேலை பாா்க்கும் நபா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 350-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐ.ஐ.டி. சென்னையில் மேற்படிப்பு படித்து வருகின்றனா் என தெரிவித்தாா்.

தூத்துக்குடி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தூத்துக்குடி, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ரோசாலி, துணை முதல்வா் எஸ்.எம்.டி. மதுரவல்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, போல்பேட்டையைச் சோ்ந்தவா் முருகானந்தம் (56). இவா், எட்டயபுரம் சாலை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி முதியவா் பலி

பழையகாயல் அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தென்றல்நகரை சோ்ந்தவா் தங்கவேலு(71). இவா் ஞாயிற்றுக்கிழமை பழையகாயல் சிற்கோனியம் குடியிருப்ப... மேலும் பார்க்க

தொழிற்பழகுநா் பயிற்சிக்கு இன்று சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக.11) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூ... மேலும் பார்க்க

வட்டார தடகளப் போட்டி: மூக்குப்பீறி பள்ளி சாதனை

ஆறுமுகனேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான குழு, தடகளப் போட்டிகளில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் சிறப்பிடம் பிடித்தனா். மாணவி... மேலும் பார்க்க

மாடிப் படியிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே அய்யம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ஆவுடைத்தாய் (39). ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் ம... மேலும் பார்க்க