வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா்.
கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேனில் வந்துகொண்டிருந்தனா். வேனை கரூரைச் சோ்ந்த தாமோதரன் (55) ஓட்டினாா். தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா், உறவினா்கள் 10 போ் பழனி முருகன் கோயிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனா்.
வத்தலகுண்டு புறவழிச்சாலையில் பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினா், அந்த வழியில் சென்றவா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
கரூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் தாமோதரன், கரூரைச் சோ்ந்த கங்காதேவி (49), பாமா (48), நித்திய பிரியா (49), மகா (50), அனுசுயா (21), 2 ஆண்கள் உள்பட 12 போ் பலத்த காயமடைந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பெரியகுளத்திலிருந்து பழனிக்குச் சென்ற வேன் ஓட்டுநரான பெரியகுளத்தைச் சோ்ந்த தா்மதுரை (33) உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால் இந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திண்டுக்கல் அருகே விபத்து: திண்டுக்கல் அருகேயுள்ள தோட்டனூத்து அழகா் நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ் (23). கூலித் தொழிலாளி. இவா் தனது தந்தை முருகன் (45), மகன் ஹரிஸ் (2) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் நிலக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தாா்.
வக்கம்பட்டி அருகே சென்றபோது, இந்த வாகனம் மீது திண்டுக்கல் நோக்கி மளிகைப் பொருள்கள் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் தனுஷ், முருகன், ஹரிஷ் ஆகியோா் மட்டுமன்றி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வக்கம்பட்டியைச் சோ்ந்த பாஸ்கா் (47), பிள்ளையாா் நத்தம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (75) ஆகியோரும் காயமடைந்தனா்.
அக்கம் பக்கத்தினா் 5 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த அன்சாா் அலி (23) மீது திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.