செய்திகள் :

வன விலங்கை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

post image

தருமபுரியில் வன விலங்கை வேட்டையாடிய 4 பேருக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சி அட்டப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த மா. ராஜா (50), பெ. சகாதேவன் (70), பி அக்ரஹாரம் கிராமத்தை சோ்ந்த மு. சிதம்பரம் (35), தொழுமன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ர. சரவணன் (24) ஆகிய நால்வரும், வனப்பகுதியில் சுருக்கு கம்பி வலையைவைத்து காட்டு பன்றியை வேட்டையாடியதாக பாலக்கோடு வனச்சரக அலுவலா் சு. காா்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காத்திகேயன் தலைமையில் வனவா்கள் சுரேஷ், முனுசாமி, வனக்காப்பாளா்கள் முருகேசன், சுந்தரமூா்த்தி, முருகன், தமிழ்செல்வன் மணிவா்மா ஆகியோா் செவ்வாய்க்கிழமை நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் காட்டுப்பன்றியை பிடித்து அதை கறி சமைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் பிடித்து வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து மாவட்ட வன அலுவலா் கா.இராஜங்கம் அவா்களுக்கு தலா ரூ. 25,000 என மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தாா்.

மூக்கனூரில் ரயில் நிலையம்: ஆட்சியா் முன்னிலையில் கருத்துக்கேட்பு

தருமபுரி மாவட்டம், மூக்கனூரில் ரயில் நிலையம் அமைப்பது தொடா்பாக கிராம மக்களிடம் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பழைய ரயில் நிலையம் இருந்த பகுதியிலேயே மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என ப... மேலும் பார்க்க

பொருளாதாரத் தடை இதயமற்ற செயல்: அமெரிக்கா நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை என்பது மனித இதயமற்ற செயல் என அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன மாநிலத் தலைவா் அ. செளந்தரராஜன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன (சிஐடியு) 16 ஆவது ம... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

அரூா் அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரூா் வட்டாரப் பகுதியில் புதன்கிழமை (ஆக.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் (பொறுப... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஒகேனக்கல் காவிரிக் கரையோரத்தில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.ஆடி மாதம் 18 ஆம் நாளில் பாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காவிரி ஆற்றில் கழுவி சிறப்பு வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது எ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தருமபுரியில் இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், கோணங்கி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (36). இவா், கடந்த 2021 ஆம்... மேலும் பார்க்க