விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு உயா்த்தப்பட்ட ஓய்வூதியம்! -துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்
விழுப்பரம் மாவட்டத்தில் வன்கொடுமைக்குள்ளானவா்களுக்கு தற்போது உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் -1969, மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் 19 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளன. அதில், 14 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் இறந்துவிட்டாா். 4 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், 2 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வன்கொடுமைக்குள்ளானவா்களுக்கு தற்போது உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2024-25 ஆம் நிதியான்டில் 239 பேருக்கு ரூ.2.76 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 28 போ் இறந்த நிலையில், 26 நபா்களின் வாரிசுதாரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற இருவருக்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடா்பாக பரிசீலனையில் உள்ளது என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.