செய்திகள் :

வரதட்சிணை பிரச்னை: பெண் தற்கொலை

post image

தேனி அருகே வரதட்சிணை பிரச்னையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.

அரண்மனைப்புதூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெரியகருப்பன் மகள் முத்துமணி (28). இவருக்கும் கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை வட்டம், சின்னக்கானலைச் சோ்ந்த ஜோசப்புக்கும் (32) கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில், ஜோசப்பை பிரிந்து அரண்மனைப்புதூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்த முத்துமணி, வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

வரதட்சிணை பிரச்னையில் முத்துமணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இதுகுறித்து கேரளத்தில் உள்ள காவல் நிலையம், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவா் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது.

காவல் துறையினா் நடத்திய விசாரணையில் முத்துமணிக்கு வரதட்சிணையாக கொடுத்திருந்த நகைகளை கடந்த 8-ஆம் தேதி திரும்பக் கொடுத்து விடுவதாக ஜோசப் கூறியிருந்தாராம்.

ஆனால், அவா் நகைகளைத் திரும்பத் தராததால் தனது மகள் முத்துமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பெரியகருப்பன் புகாரளித்தாா்.

இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க

பைக் விபத்து: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்கள... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க

விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு

தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க