செய்திகள் :

வள்ளியூா் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள தெற்குஆறுபுளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்துச்சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தெற்குஆறுபுளியைச் சோ்ந்தவா் அன்னம்மாள் (78). இவரது கணவா் ஞானபிரகாசம் சில ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்டாா். இதனால், தனியாக வசித்து வரும் அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் இரவு தூங்கியபோது 2 போ் கதவை தட்டியுள்ளனா்.

அவா் கதவை திறக்காததால் அவா்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் காதில் அணிந்திருந்த மூன்று கிராம் தங்க கம்மல், ரூ. ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

மொபெட் திருட்டு: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள பனையங்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜெகநாதன்(60). இவா், தான் நடத்திவரும் மளிகைக் கடைக்கு, நத்தம் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள மொத்த வியாபாரக் கடையில் பொருள்களை வாங்கி மொபெட்டில் வைத்து விட்டு, பணம் கொடுக்க கடைக்குள் சென்றுவிட்டு திரும்புவதற்குள் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்களுடன் மொபெட் திருடுபோனதாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், முக்கூடல் அருகேயுள்ள செங்குளம் பூவலிங்கம் மகன் இசக்கி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க