செய்திகள் :

வாகனம் மோதியதில் மயில் உயிரிழப்பு

post image

பழனியை அடுத்த மானூா் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் உயிரிழந்தது.

பழனியை அடுத்த திண்டுக்கல்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் பல ஏக்கா் பரப்பளவில் வயல்வெளிகள் இருப்பதால், நாள்தோறும் இரை தேடி நூற்றுக்கணக்கான மயில்கள் வருகின்றன. இந்த மயில்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் போது, வாகனங்களில் அடிபட்டு காயமடைகின்றன.

இந்த நிலையில், இந்தச் சாலையில் மானூா் பிரிவு அருகே சுமாா் ஆறு அடி நீள ஆண் மயில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினா் மயிலின் உடலை மீட்டனா். இதன் பின்னா், கால்நடை மருத்துவா் மூலம் கூறாய்வு செய்து புதைத்தனா்.

கல்லூரி மாணவி தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த காப்பிலியபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் ஆனந்த ஜோதி (19). இவா் ஒட்டன்சத்தி... மேலும் பார்க்க

மீண்டும் மருத்துவ விடுப்பில் பேராசிரியை நிகிதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி மீது திருட்டு புகாா் அளித்த திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திங்கள்கிழமை பணிக்குத் திரும்பிய நிலையில், மீண்ட... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று நிலவி வருவதால், மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொட... மேலும் பார்க்க

அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்திலிருந்து ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு

செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்வது தொடா்பாக இரு கிராம மக்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு செய்... மேலும் பார்க்க

சாலையோர கிணறுகளுக்கு தடுப்பு வேலிகள்

செம்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாத கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள ஆபத்தான கிணறுகளுக்கு, செவ்வாய்க்கிழமை இரும்பு கம்பி தடுப்பு வேலை அமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்ட... மேலும் பார்க்க