செய்திகள் :

வாக்காளர் பட்டியல் திருத்தம்: பிகாரில் வலுக்கும் போராட்டம்!

post image

பிகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் பிகாரில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சோன்பூர் மற்றும் ஹாஜிபூரில் முற்றுகைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் டயர்களை சாலையில் போட்டு எரித்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக பாட்னாவில் காலை 10 மணிக்கு நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவுள்ளார்.

கோலம்பரில் உள்ள வருமான வரி அலுவலகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாக ராகுல் காந்தி செல்லவிருக்கிறார். அவருடன் தேஜஸ்வி யாதவும் பங்கேற்கிறார்.

ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விகாஷீல் இன்சான் கட்சி மற்றும் சுயேச்சைத் தலைவர் பப்பு யாதவ் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் ஈடுபடவுள்ளனர்.

சோன்பூரில் ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முக்கிய போராட்ட இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜெகனாபாத் ரயில் நிலையத்தில் ஆர்ஜேடி மாணவரணியினர் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Trains halted, roads blocked: INDIA bloc protests over Bihar voter roll revision

இதையும் படிக்க :டாலர்தான் ராஜா..! பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க