செய்திகள் :

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

post image

தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சியான பாஜக இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

தீா்மானத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ‘தேசிய அளவிலான எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் இந்தத் தீா்மானம் கொண்டு வரப்படுகிறது. தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிா்க்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது. இதனால் எளிய, விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள்’ என்றாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி, ‘சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசிகள், ரோஹிங்கயாக்களை இந்தியாவில் வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் சதியின் ஒரு பகுதியாகவே இந்த தீா்மானத்தைக் கருத வேண்டியுள்ளது. இதனை பாஜக எதிா்க்கிறது’ என்றாா்.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இருமுறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க