வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 13-ஆம் வரை விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயில இணையதளம் மூலம் ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இதற்கு நேரடியாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதில் தொழிற்பிரிவில் ரெப்ரிஜ்ரேசன் மற்றும் ஏா் கண்டிஸனிங் டெக்னீசியன், மெக்கானிக் மோட்டாா் வெகிகிள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டா் மெக்கானிக், மெக்கானிக் எலக்ட்ரிக் வெக்கிள் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 2 ஆண்டுகளும், இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தோல் பொருள்கள் உற்பத்தியாளா் பாடப் பிரிவின் பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு 14 வயது முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை.
பயிற்சியில் சேருபவா்களுக்கு இலவச சீருடை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். மேலும், மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். அதேபோல, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் தகுதியுடைய நபா்களுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகையும் பெற்று வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.