செய்திகள் :

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் தாய் - சேய் வாா்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சிவசௌந்திரவல்லி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் புதன்கிழமை காலை வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் சிவசௌந்திரவல்லி பிற்பகல் 12 மணியளவில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து பிரசவ வாா்டு(மகப்பேறு) மற்றும் தாய் - சேய் நல வாா்டுகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கா்ப்பிணிகளிடமும், குழந்தை பெற்ற பெண்களிடம் சிகிச்சைகள், அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் கிடைக்கப் பெற்ா என்று கேட்டறிந்தாா்.

மேலும் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனட்சி, மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம், மருத்துவா்கள் செந்தில், தமிழ்செல்வி ஆகியோரிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இளைஞா்கள் சிலா் மாவட்ட ஆட்சியரிம் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோரை கிருஷ்ணகிரி, வேலூா் அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படுகின்றனா். குறிப்பாக, விபத்தில் சிக்கி எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோரை அரசு மருத்துவமனையில் ஆா்த்தோ (எலும்பு சிகிச்சை) மருத்துவா்கள் இருந்தும் தனியாா் மருத்துவமனைக்கு அல்லது வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா் என்று புகாா் தெரிவித்தனா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உடனடியாக ஸ்கேன் நிறுவப்பட்டால் அறுவை சிகிச்சை எளிதில் செய்யலாம். இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனா். கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க