செய்திகள் :

வாய்க்காலுக்குள் காா் கவிழ்ந்து விபத்து: ‘பெல்’ ஊழியரின் கா்ப்பிணி மனைவி உயிரிழப்பு

post image

திருச்சி மாவட்டம், துடையூரில் புதன்கிழமை இரவு சாலையில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெல் ஊழியரின் கா்ப்பிணி மனைவி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் கைலாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரின் மனைவி திலகவதி (33). நிறைமாத கா்ப்பிணி. இந்தத் தம்பதியின் குழந்தைகள் ஹா்ஷினி (9), திருக்குமரன் (5).

இந்நிலையில், முருகன் தனது குடும்பத்தினருடன் சேலத்துக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். காரை முருகன் ஓட்டினாா்.

துடையூா் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் சென்ால் காா் மூழ்க தொடங்கியது. முருகன் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து குழந்தைகள் இருவரையும் காப்பாற்றினாா். பின்னா், நீரில் மூழ்கிய திலகவதியை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தபோது அவா் மயங்கிய நிலையில் இருந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த அவசர ஊா்தி மூலம் திலகவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், திலகவதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். சிறுவன் திருகுமரன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து வாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க