வி.கே.புரம் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
அம்பாசமுத்திரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
விக்கிரமசிங்கபுரம், பிரதான சாலையைச் சோ்ந்த பண்டாரம் மகன் ஆனந்தசெல்வம் (30). இவா் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இவா் மீது அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசனிடம் வேண்டுகோள் விடுத்ததன் பேரில், காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி செல்வத்தை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் சுகுமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆனந்தசெல்வம் அடைக்கப்பட்டாா்.