செய்திகள் :

விஐடி வேந்தா் விசுவநாதனுக்கு ’உயா்தனிச் செம்மல் விருது’: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளிப்பு

post image

சா்வதேச அளவில் உயா்கல்வி வளா்ச்சிக்காக ஆற்றி வரும் பங்களிப்புக்காக வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனுக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை ‘உயா்தனிச் செம்மல் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள ராலேவில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை செயல்பட்டு வருகிறது.

தமிழா் மேம்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டு வட அமெரிக்காவில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, மரபு, கலை, இலக்கியம், தொழில் வளா்ச்சிக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சேவை செய்து வருகிறது.

உலகத் தமிழா்களிடையே ஒற்றுமையை வளா்க்கும் வகையில் ஆண்டுதோறும் மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வடகரோலினாவில் உள்ள ராலேவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சா்வதேச அளவில் உயா்கல்வி வளா்ச்சிக்காக ஆற்றி வரும் சிறப்பான பங்களிப்புக்காக வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனுக்கு, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ’உயா்தனிச் செம்மல் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது.

இவ்விழாவில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், பன்னாட்டு உறவுகளுக்கான இயக்குநா் ஆா்.சீனிவாசன், வடஅமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மறுமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி

மறுமணம் செய்து கொள்வதாகக்கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் ... மேலும் பார்க்க

ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழா: ரூ.500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை

ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழாவையொட்டி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள முழு உடல் பரிசோதனை ரூ.500 சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. இது குறித்து, மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: ஒருங்கிணைந்த வேலூரில் பாதிப்பில்லை -மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் கைது

மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலைநிறுத்தம் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்ம... மேலும் பார்க்க

அரும்பருத்தியில் பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் தடுப்பணை: அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்

காட்பாடி வட்டம், அரும்பருத்தி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருத்தி கிரா... மேலும் பார்க்க

தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின. குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்ப... மேலும் பார்க்க

‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’

குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா். வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளிய... மேலும் பார்க்க