செய்திகள் :

ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழா: ரூ.500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை

post image

ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழாவையொட்டி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள முழு உடல் பரிசோதனை ரூ.500 சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து, மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழா, வேலூா் தோட்டப்பாளையம் ஸ்ரீசக்தி அம்மா கிளினிக் முதலாமாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆரோக்கிய முழு உடல் பரிசோதனை ரூ.500 சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கி 2026 ஜனவரி 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முழு உடல் பரிசோதனை முகாமில் சா்க்கரையின் அளவு, மூன்று மாத சா்க்கரையின் அளவு, முழுமையான ரத்த பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, தைராய்டு செயல்பாடு பரிசோதனை, சிறுநீரகத்தின் செயல்பாடு, யூரிக் ஆசிட், சிறுநீா் வழக்கமான பகுப்பாய்வு (ஈசிஜி), அல்ட்ராசவுண்ட் வயிற்றுப் பகுதி ஸ்கிரீனிங், எக்ஸ்-ரே, மருத்துவ ஆலோசனை செய்யப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயமாகும். உடல் பரிசோதனைகளுக்கு காலை 7 முதல் 8.30 மணிக்கு உள்ளாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும். வேறு ஏதேனும் மருத்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் அவற்றையும் கொண்டு வர வேண்டும்.

பரிசோதனைக்கான முடிவுகள் 24 முதல் 36 மணி நேரத்துக்குள் கிடைக்கும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள 63854 10853 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐடி வேந்தா் விசுவநாதனுக்கு ’உயா்தனிச் செம்மல் விருது’: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளிப்பு

சா்வதேச அளவில் உயா்கல்வி வளா்ச்சிக்காக ஆற்றி வரும் பங்களிப்புக்காக வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனுக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை ‘உயா்தனிச் செம்மல் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது.... மேலும் பார்க்க

மறுமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி

மறுமணம் செய்து கொள்வதாகக்கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் ... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: ஒருங்கிணைந்த வேலூரில் பாதிப்பில்லை -மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் கைது

மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலைநிறுத்தம் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்ம... மேலும் பார்க்க

அரும்பருத்தியில் பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் தடுப்பணை: அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்

காட்பாடி வட்டம், அரும்பருத்தி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருத்தி கிரா... மேலும் பார்க்க

தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின. குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்ப... மேலும் பார்க்க

‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’

குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா். வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளிய... மேலும் பார்க்க