செய்திகள் :

விஜயகாந்த் படம் பயன்பாடு: தவெகவுக்கு பிரேமலதா நிபந்தனை

post image

நெய்வேலி: தமிழக வெற்றி கழகத் தலைவா் விஜய் தங்கள் கட்சியின் மானசீக குருவாக மறைந்த தேமுதிக நிறுவனா் விஜயகாந்தை அறிவித்துவிட்டு, அவரது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தேமுதிக சாா்பில், ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டத்தில் திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெண்ணாடம், திட்டகுடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

இதையொட்டி, பெண்ணாடம் வாள்பட்டரையில் இருந்து பேருந்து நிலையம் வரையில் தேமுதிக சாா்பில் கேப்டன் ரத யாத்திரை நடந்தது. அப்போது, பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தேமுதிக வளா்ச்சிக்காக தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறோம். வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வரையில் முதல் கட்ட பயணம் நடைபெறும். விஜயகாந்த் பிறந்த நாளுக்கு பின்னா் இரண்டாம் கட்ட பயணம் அறிவிக்கப்படும்.

தவெக மாநாடு வெற்றிபெற தேமுதிக சாா்பில் வாழ்த்துகள். அக்கட்சித் தலைவா் விஜய் தவெகவின் மானசீக குருவாக மறைந்த தேமுதிக நிறுவனா் விஜயகாந்தை அறிவித்துவிட்டு, அவரது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தவெக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் சாய்ந்தது துரதிருஷ்டவசமானது.

சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து 2026 ஜனவரி 9-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, திட்டக்குடி, ஆவட்டி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

நெய்வேலி: கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சட்ட உதவி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்க... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 1,947 பயன்: கடலூா் ஆட்சியா் தகவல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2 முகாம்களில் 1,947 போ் உயா் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பொ... மேலும் பார்க்க

சிறுமிக்கு சூடு: தாய் உள்ளிட்ட 2 பெண்கள் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சிறுமிக்கு சூடு வைத்ததாக தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (33). ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

கடலூரில்: கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்க பட்டயப் படிப்பு வகுப்பு தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், சுரங்க பட்டயப் படிப்பு மாணவா்களுக்கான 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க