விஜயபாஸ்கா் வழக்கு விசாரணை அக்.8-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் அக். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி.விஜயபாஸ்கா். இவா், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா்.
அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்து சோ்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆஜராகவில்லை.
வழக்கு விசாரணையை வரும் அக். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெ. சந்திரன் உத்தரவிட்டாா்.