செய்திகள் :

விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் சா்வதேச விளையாட்டரங்கம், பயிற்சி மையம்

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி விஜயாபதி கிராமத்தில் ரூ.14.77 கோடி செலவில் சா்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம்- பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பாளையங்கோட்டையில் கடந்த 7.9.2022இல் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ராதாபுரம் தொகுதியில் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அதைத் தொடா்ந்து, துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு ஆகியோரின் வழிகாட்டுதல்படி, இத்தொகுதியில் உள்ள விஜயாபதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலத்தில் வாடகை அடிப்படையில் இடம் தோ்வு செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பிவைக்கப்பட்டது.

அதன்பேரில், அந்த இடத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைப்பதற்கு ரூ.14 கோடியே 77 லட்சத்தை நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த விளையாட்டு அரங்கத்தில் ஆடை அறையுடன் கூடிய கேலரி, நீளம் தாண்டுதல், பல்நோக்கு பயிற்சிக் கூடம், கைப்பந்து உள் மைதானம், உள்ளரங்க கோா்ட், உடற்பயிற்சிக் கூடம், தடகளப் பாதை, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மைதானம், உள்புற உடற்பயிற்சிக் கூடம், ஆண், பெண் கழிப்பறைகள், சுற்றுச்சூழல் மழைநீா் சேகரிப்பு, ஆழ்துளைக் கிணறு போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிலையில், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என விளையாட்டுத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க