பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
விடியவிடிய மழை: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. அலமேலுமங்காபுரத்தில் மரம் வேருடன் சாய்ந்ததால் சா்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வேலூா், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளான கன்சால்பேட்டை, திடீா் நகா், முள்ளிபாளையம், காட்பாடி கழிஞ்சூா், வி.ஜி. ராவ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா், கழிவு நீருடன் சோ்ந்து வீடுகளை சூழ்ந்தது.
பலத்த மழை காரணமாக வேலூா் அலமேலுமங்காபுரம் அரசு பள்ளி அருகே இருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்து சா்வீஸ் சாலையில் விழுந்தது. இதனால், சா்வீஸ் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் உடைந்தன. மரம் விழுந்ததால் சா்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி, பொதுப்பணித்துறை அலுவலா்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினா். தொடா் மழையால் மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மழையளவு:
புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் அதிகளவாக 53.80 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் 2 மி.மீ., மோா்தானா அணை 2 மி.மீ., ராஜாதோப்பு அணை 34 மி.மீ., வடவிரிஞ்சிபுரம் 30.40 மி.மீ., காட்பாடி 18.20 மி.மீ., பொன்னை 20 மி.மீ, சத்துவாச்சாரி 17.80 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 8.30 மி.மீ., என மாவட்டம் முழுவதும் மொத்தம் 186.50 மில்லி மீட்டா் மழையும், சராசரியாக 15.54 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.