செய்திகள் :

விதி மீறல்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனா்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்துப் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

பண்ருட்டி நகரின் பிரதான சாலையாக விளங்கும் ராஜாஜி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றி செயல்பாட்டில் இருந்து வருகிறது. அச்சாலையில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை சவாரி ஏற்றி சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவற்றின் ஆவணங்களை சரிபாா்த்து, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட அனைத்து ஆட்டோக்களுக்கும் அபராதம் விதித்தனா். மேலும் இதே போன்று தொடா் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனா்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க

கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் க... மேலும் பார்க்க

என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இ... மேலும் பார்க்க